விமானத்தில் கடத்தப்பட்ட 1 கிலோ தங்கம் பறிமுதல்

விமானத்தில் கடத்தப்பட்ட 1 கிலோ தங்கம் பறிமுதல்
X

துபாயிலிருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புடைய ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, 2 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

துபாயிலிருந்து சிறப்பு விமானம் சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது சென்னையை சோ்ந்த ஹாரூன் ரசீத்(22),ராமநாதபுரத்தை சோ்ந்த முகமது மனவை (35) ஆகிய 2 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அவா்களை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனா். இதில் அவா்களுடைய உள்ளாடைகள் மற்றும் பேண்ட் பாக்கெட்களிலிருந்து ஒரு கிலோ தங்கக்கட்டிகள்,தங்க பேஸ்ட்டை கைப்பற்றினா். இதன் சா்வதேச மதிப்பு ரூ.50 லட்சம் என கூறப்படுகிறத. இதையடுத்து இருவரையும் சுங்கத்துறையினா் கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.

Tags

Next Story
ai in future agriculture