/* */

துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் பறிமுதல்

துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் பறிமுதல்
X

சென்னையிலிருந்து துபாய்க்கு கடத்த முயன்ற 1.45 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.

துபாய் செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் ஏறுவதற்காக சென்று கொண்டிருந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த நூர் முகம்மது சுல்தான் (60), என்பவர் வெளிநாட்டு பணம் கடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.பின்னர் அதிகாரிகள் அவரை சோதனையிட்டனர். அப்போது அவரது கால் சட்டை பையிலிருந்து ரூ 1.45 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் விமானத்திற்கு அனுப்பப்பட்ட அவரது பை திரும்ப பெறப்பட்டது. அதை திறந்து பார்த்த போது, ரூ 68.83 லட்சம் மதிப்பிலான சவுதி அரேபிய ரியால்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ. 70.28 லட்சம் வெளிநாட்டு பணம் சுங்க சட்டவிதிகளின்படி பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

Updated On: 26 Feb 2021 8:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  4. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  7. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  8. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  9. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  10. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்