ஸ்டாலினுக்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து -உயர்நீதிமன்றம்

ஸ்டாலினுக்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து -உயர்நீதிமன்றம்
X

சட்டமன்றத்திற்குள் குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை சட்டமன்றத்திற்குள் எடுத்து வந்ததாக, 18 திமுக எம்எல்ஏக்கள் மற்றும் கு.க. செல்வத்துக்கு உரிமை மீறல் குழு இரண்டாவது நோட்டீஸ் அனுப்பியது. உரிமை மீறல் குழுவின் நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா நாராயணன், 2வது நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டார்.

Tags

Next Story
ai in future agriculture