/* */

செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் கருமாரப்பாக்கம் பகுதியில் செல்போன் டவர் அமைக்க அக்கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கருமாரப்பாக்கம்-ஈச்சங்கரணை ஆகிய கிராமங்களுக்கு நடுவே தனியார் செல்போன் அமைக்க முயன்றபோது அதனை சுற்றியுள்ள 8 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். ஆனால் டவர் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மீண்டும் ஜே,சி,பி இயந்திரங்களுடன் வந்த முன்னாள் காவல் அதிகாரி ஒருவரின் தலைமையில் அதே இடத்தில் டவர் அமைக்க பணியை துவங்கினர்.

இதை கண்ட அப்பகுதி மக்கள் கடும் வாக்கிவாத்தில் ஈடுபட்டு திருக்கழுக்குன்றம் தாசில்தாரிடம் தகவல் அளித்தனர். அங்கு வந்த தாசில்தார் துரைராஜ், மற்றும் ஈச்சங்கரணை வி.ஏ.ஓ ஹரிகிருஷ்ணன், மற்றும் கருமாரப்பாக்கம் வி.ஏ.ஓ சுமதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு செல்போன் டவர் அமைக்கும் பணியை நிறுத்தினர். எனவே, செல்போன் டவரை மக்கள் நடமாட்டம் இல்லாத வேறு பகுதிக்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Updated On: 30 April 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்