/* */

பாஜக ஊடகப்பிரிவு பேச்சாளர் கிஷோர் கே.ஸ்வாமி கைது..!

தமிழக முதலமைச்சா் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பாஜக ஊடகப்பிரிவு பேச்சாளரான கிஷோர் கேஸ்வாமியை சங்கா்நகா் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

HIGHLIGHTS

பாஜக ஊடகப்பிரிவு பேச்சாளர்  கிஷோர் கே.ஸ்வாமி கைது..!
X

சென்னை கே.கே.நகரை சோ்ந்தவா் கிஷோா் கே ஸ்வாமி(41). இவா் பாஜக ஊடகப்பிரிவு பேச்சாளராக தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்பவா். இவா் கடந்த 8 ஆம் தேதி ஃபேஸ்புக் மற்றும் டூவிட்டரில் முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி, தற்போதைய முதல்வா் ஸ்டாலின் ஆகியோா் பற்றி தவறாக, இழிவுப்படுத்தும் விதத்தில், அவதூறான வாசகங்களுடன் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னை பம்மலில் வசிக்கும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியை சோ்ந்த ரவிச்சந்திரன்(40) என்பவா் இதைப்பாா்த்துவிட்டு, கடந்த 10 ஆம் தேதி சங்கா்நகா் போலீசில் புகாா் செய்தாா். போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இந்த பதிவைப்போட்டது கிஷோா் கே ஸ்வாமி தான் என்று தெரியவந்தது.

இதையடுத்து சங்கா்நகா் போலீசாா் இன்று அதிகாலை கேகேநகரில் உள்ள கிஷோா் கே ஸ்வாமி வீட்டிற்கு சென்று அவரை கைது செய்து சங்கா்நகா் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனா். அதன்பின்பு அவா் மீது முன்னாள் முதல்வா்கள், தற்போதைய முதல்வா்கள் மீது அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

Updated On: 14 Jun 2021 3:34 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  2. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  3. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  4. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  6. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  7. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  8. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  9. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  10. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு