/* */

தாம்பரம் அருகே கட்டிட பணியின் போது வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

தாம்பரம் அருகே கட்டிட பணியின் போது வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

தாம்பரம் அருகே கட்டிட பணியின் போது வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
X

மின்சார விபத்து ஏற்பட்ட இடம்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாண்டியன்(22), மற்றும் அவரது நண்பர் சந்துரு(24), இருவரும் கடந்த 15, நாட்களாக தாம்பரத்தை அடுத்த பதுவஞ்சேரி கரிகாலன் தெருவில் உள்ள வீடு ஒன்றில் கட்டிட பணி நடைபெற்று வரும் நிலையில் தூண் அமைப்பதற்காக பள்ளத்தை இரும்பு கடப்பாறையால் தோண்டிய போது பூமிக்கு அடியில் செல்லும் மின்சார கேபிளில் உரசியதில் மின்சாரம் தாக்கியது.

அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது நண்பர் சந்துரு காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் தூக்கிவீசப்பட்டனர்.இதில் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் சிறிய காயங்களுடன் சந்துரு அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

உடனடியாக மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 21 March 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்