/* */

செம்மஞ்சேரியில் 25 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞர் 3 பேர் கைது

செம்மஞ்சேரியில் 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது; இதுதொடர்பாக, வடமாநில இளைஞர் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

செம்மஞ்சேரியில் 25 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞர்  3 பேர் கைது
X

செம்மஞ்சேரியில் 25 கிலோ கஞ்சா வழக்கில் கைதான  வடமாநில இளைஞர்கள்.

செம்மஞ்சேரியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக, பொன்னியம்மன் கோயில் அருகே வீடு எடுத்து தங்கி வந்தவர்களை, சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரித்தனர். இதன் அடிப்படையில், திரிபுரா மாநில இளைஞர்கள் மாமான்மியா(22), ஜாஹிர் உசேன்(21), சுமன் அஃத்தார்(20), ஆகியோரை செம்மஞ்சேரி போலீசார் கைது செய்தனர். வடமாநில இளைஞர்களிடம் இருந்து 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது

விசாரணையில், திரிபுராவில் இருந்து ரயிலில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. கைதான மமன் மியாவும், ஜாஹீரும் வேளச்சேரியில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த நபரின் டீக்கடையில், வேலை செய்து வந்துள்ளனர். சுமன், மேடவாக்கத்தில் தச்சு கூலி வேலை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. விசாரணைக்கு பின்னர் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 16 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது