/* */

'கிரேன் சூடிய மாலை' : அதிமுக வேட்பாளருக்கு மெகா வரவேற்பு

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி வேட்பாளருக்கு கிரேன் மாலை வரவேற்பு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கிரேன் சூடிய மாலை :  அதிமுக வேட்பாளருக்கு மெகா வரவேற்பு
X

சென்னை புறநகர் மாவட்ட கழகம், சோளிங்கநல்லூர் சட்டமன்ற வேட்பாளர் கே.பி கந்தன் பள்ளிக்கரணையில் திறந்த வெளி ஜிப்பில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது வேட்பாளரை வரவேற்க தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் ப்ராமிஸ் அம்பேத்கர் 20அடி உயரமுள்ள ராட்ஷச மாலையை கிரேனில் தூக்கி வந்து கே.பி.கந்தனுக்கு அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அதிமுக பெயர் பொறிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பலூன்களை மொத்தமாக பறக்கவிட்டார். பின்னர் வேட்பாளர் கந்தனுக்கு வீர வாள் ஒன்றை பரிசளித்தார்.

அதிமுக வெற்றி பெற துலுக்கானத்தம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மேலும் பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளரை வரவேற்றனர். அப்போது கே. பி.கந்தன் ஆங்காங்கு இருந்த பெண்களிடம் அதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டும். உங்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி அனைத்தும் நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

Updated On: 29 March 2021 1:06 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  4. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  6. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...