/* */

வடியாத வெள்ளம் - விடியாத மக்களின் அவலம்: துரைப்பாக்கத்தில் பரிதாபம்

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை துரைப்பாக்கத்தில், மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

HIGHLIGHTS

வடியாத வெள்ளம் - விடியாத மக்களின் அவலம்: துரைப்பாக்கத்தில் பரிதாபம்
X

துரைப்பாக்கத்தில், கெனால் ஒட்டிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து பல இடங்களும் வெள்ளக்காடாக மாறிவிட்டன. அவ்வகையில், பழைய மகாபலிபுரம் சாலை துரைப்பாக்கத்தில் கெனால் ஒட்டிய பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது.
இங்குள்ள பாண்டியன் நகர் முழுவதுமே, சுமார் 4 அடி வரை மழைநீர் தேங்கி உள்ளது. அருகில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில், நீர்வரத்து தடைப்பட்டிருப்பதால், இப்பகுதிகளில் மழைநீர் தேங்கும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பக்கிங்ஹாம் கால்வாயை முறையாக தூர்வாராததால் கால்வாயில் மழைநீர் செல்லாமல், தங்கள் வீடுகளை சூழ்ந்துள்ளதாகவும், உடமைகள் சேதமடைந்துள்ளதாகவும், அப்பகுதி மக்கள் வேதனையோடு குறிப்பிடுகின்றனர். பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு உடனடியாக நிவரணங்களை அரசு வழங்கிட வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 12 Nov 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க