/* */

சென்னை புறநகர் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடி வந்த 4 பேர் கைது

சென்னை புறநகர் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடி வந்த 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து நகைகளை மீட்டனர்.

HIGHLIGHTS

சென்னை புறநகர் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடி வந்த 4 பேர் கைது
X

பைல் படம்

சென்னை பெரும்பாக்கத்தில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த நபர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் பெரும்பாக்கம் காவல் நிலைய பழைய குற்றவாளிகள் என்பதும், கண்ணகி நகரைச் சேர்ந்த துரைராஜ்(25), தனுஷ் (எ) டாமல்(19), வீரமுத்து(19) மற்றும் நாகராஜ் (எ) நாகு(24) என தெரிய வந்தது.
இந்நிலையில் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது பெரும்பாக்கம், ஊரப்பாக்கம் மற்றும் கூடுவாஞ்சேரி என சென்னையின் புறநகர் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிவந்துள்ளது.
அவர்களிடமிருந்து பெரும்பாக்கம் காவல் நிலைய வழக்கில் செல்போன் மற்றும் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதியில் திருடப்பட்ட 6 1/2 சவரன் தங்க நகை மற்றும் கேமரா ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.
பின்னர் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த பெரும்பாக்கம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 25 Jan 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  2. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  3. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  4. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  5. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  6. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  10. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!