/* */

பல்லாவரம் அருகே அடகுக்கடையில் 30 சவரன் நகை அபேஸ்: 2 பேர் கைது

பல்லாவரம் அருகே, அடகுக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து, 30 சவரன் தங்க சங்கிலியை திருடிச் சென்ற பட்டதாரி இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலையில், பல வருடங்களாக அடகுகடை, மற்றும் நகை விற்பனை கடையை நடத்தி வருபவர் கமலேஷ் ஜெயின். இவரது கடைக்கு கடந்த 31-10-2021 அன்று, நகை வாங்குவது போல் வந்த இளைஞர் ஒருவர், தங்கச் சங்கிலி வேண்டும் என கேட்க அவரும் கடையில் இருந்த செயின்களை காண்பித்துள்ளார்.

செயினின் மாடல் பிடிக்க வில்லை என கூறிய இளைஞர், வேறு செயினை காண்பிக்க கேட்டுள்ளனர். இதனால் கமலேஷ் ஜெயின் அருகில் உள்ள, தெரிந்தவரின் நகைக்கடையில் இருந்து 5 தங்கச் சங்கிலியை எடுத்து வந்து காண்பித்துள்ளார். அதனை வாங்கி பார்த்துக் கொண்டிருந்த போதே நகைக்கடைகாரரின் கவனத்தை திசை திருப்பி, கண்ணிமைக்கும் நேரத்தில் 30 சவரன் மதிப்புள்ள, 5 தங்க சங்கிலியையும் எடுத்துக் கொண்டு, வெளியில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த நபருடன் தப்பிச் சென்றார்.

இச்சம்பவம் தொடர்பாக, கமலேஷ் ஜெயின் கொடுத்த புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து வாகன எண்ணை வைத்து இருவரையும் தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். விசாரணையில் இருவரும் பட்டப்படிப்பு படித்தவர்கள் எனவும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த் பிரான்சிஸ் சேவியர்(24), மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த வினோத் (32), என்பது தெரியவந்தது. பணம் பிரச்சனை இருந்ததால் வினோத் திட்டமிட்டு தனது நண்பரான பிரான்சிஸ் சேவியரோடு சேர்ந்து இதில் ஈடுபட்டுள்ளார். 30 சவரன் தங்க நகை, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 16 Nov 2021 11:33 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...