/* */

பல்லாவரம்: வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதி

பல்லாவரம் அருகே வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

HIGHLIGHTS

பல்லாவரம்: வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதி
X

பழைய பல்லாவரம் பகுதியில் பெய்த கன மழையில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். 

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம் ரேணுகா நகர் பகுதியில், கடந்த இரண்டு நாட்கள் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக மழைநீரானது வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளிலேயே சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக கால்வாய் நீர், சாலை முழுவதும் நிரம்பி வருவதால் துர்நாற்றம் ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக, இதே பிரச்சனை இந்த பகுதியில் இருப்பதாகவும், இது குறித்து பல முறை எம்.எல்.ஏ. மற்றும் நகராட்சிக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பகுதி மக்கள் குற்றம் சாட்டிகின்றனர். எனவே உடனடியாக பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 9 Nov 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு