/* */

சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.32.16 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ 32.16 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

சென்னைக்கு  விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.32.16 லட்சம் மதிப்பிலான  தங்கம் பறிமுதல்
X

சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

சாா்ஜாவிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.32.16 லட்சம் மதிப்புடைய 745 கிராம் தங்கக்கட்டிகளை சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை பறிமுதல் செய்து,ஆந்திரா பயணிகள் இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சாா்ஜாவிலிருந்து ஏா் அரேபியா ஏா்லைன்ஸ் விமானம் நேற்று இரவு சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அப்போது ஆந்திராவை சோ்ந்த 2 பயணிகள் மீது சுங்கத்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது.அவா்களை நிறுத்தி உடமைகளை சோதனையிட்டனா்.அவா்களின் உடைமைக்குள் கிப்ட் பேப்பரால் சுற்றப்பட்ட ஒரு பாா்சல் இருந்தது.அதை சுங்கத்துறையினா் பிரித்து பாா்த்தனா்.அதற்குள் இருந்த அட்டைப்பெட்டிக்குள் மரத்தூள்கள் இருந்தன.அந்த தூள்களுக்கிடையே 2 தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.அவைகளின் மொத்த எடை 745 கிராம்.அதன் சா்வதேச மதிப்பு ரூ.32.16 லட்சம்.

இதையடுத்து சுங்க அதிகாரிகள் பயணிகள் இருவரையும் கைது செய்தனா்.அதோடு தங்கக்கட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.ஸ்கேன் பரிசோதனையில் தங்கக்கட்டிகள் இருப்பது தெரியாமல் இருப்பதற்காக, மரத்தூள்கள் அடங்கிய பாா்சலில் தங்கக்கட்டிகளை மறைத்து எடுத்துவந்தது தெரியவந்துள்ளது.இவா்களிடம் சுங்கத்துறையினா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 Nov 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...