Longest river in tamilnadu காவிரி தமிழகத்தின் நீண்ட ஆறு மட்டுமல்ல...தமிழ் மக்களின் உயிர் நாடி

Longest river in tamilnadu காவிரி தமிழகத்தின் நீண்ட ஆறு மட்டுமல்ல...தமிழ் மக்களின் உயிர் நாடி
X
காவிரி ஆறு (கோப்பு படம்)
Longest river in tamilnadu காவிரி தமிழகத்தின் நீண்ட ஆறு மட்டுமல்ல...தமிழ் மக்களின் உயிர் நாடியாகவும் புண்ணிய நதியாகவும் வணங்கப்படுகிறது.

Longest river in tamilnadu,காவிரி ஆறு தமிழ்நாட்டின் மிக நீளமான நதியாகும், இது கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் வழியாக 765 கிலோமீட்டர்கள் பாய்கிறது. இது நீர்ப்பாசனம், குடிநீர் மற்றும் தொழில்துறைக்கான நீர் ஆதாரமாக உள்ளது. மேலும் இது ஒரு முக்கியமான கலாச்சார மற்றும் மத நதியாகும்.

இது காவிரியின் வரலாறு...

Longest river in tamilnadu,காவிரி ஆறு தென்மேற்கு கர்நாடகாவின் பிரம்மகிரி குடகு மலையில் உற்பத்தியாகிறது. இது கர்நாடக மாநிலத்தின் வழியாக தெற்கே பாய்கிறது, அங்கு அதன் இரண்டு முக்கிய துணை நதிகளான ஹேமாவதி மற்றும் லக்ஷ்மந்தீர்த்தா ஆகியவற்றால் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நதி பின்னர் தமிழகத்திற்குள் நுழைந்து காவிரி டெல்டா வழியாக பாய்ந்து வங்கக் கடலில் கலக்கிறது.

பெண் தெய்வங்கள் பெயரில் நதிகள்

Longest river in tamilnadu,பொதுவாக பண்டைக்காலம் முதலே ஆறுகள் எல்லாமே பெண் தெய்வங்களாக வழிபடப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள நதிகளுக்கு எல்லாம் மூலாதாரமாக விளங்கும் கங்கை ஆறும் ஒரு பெண் தெய்வம் தான். ஆகாயத்தில் ஜீவநதியாக பாய்ந்து கொண்டிருந்த கங்கை பூமியில் பிரவாகம் எடுத்தால் அதன் வேகத்திற்கு உயிரினங்கள் தாங்காது என்பதால் சிவபெருமான் அதனை தனது கூந்தலில் செருகிக்கொண்டார் என்பது ஐதீகம்.

கங்கை, யமுனை, சரஸ்வதி, பிரம்ம புத்ரா, சிந்து, கோதாவரி என எல்லா நதிகளும் பெண்களின் பெயரில் தான் உள்ளன. அந்த வகையில் தான் காவிரியும் பெண் தெய்வமாக தமிழக மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.


காகம் உருட்டியதால் காவிரி

Longest river in tamilnadu,கும்ப முனி எனப்படும் அகத்தியவர் குடகு மலையில் தனது கமண்டலத்தில் வைத்திருந்த ஜலத்தை (தண்ணீர்) காகம் உருட்டி விட்டதால் அதில் இருந்து பெருகிய நீரே பெரிய ஆறாக மாறியதாவும், காகம் உருட்டி விட்டு உருவானதால் அதற்கு காவிரி என பெயர்வந்ததாகவும் ஒரு பெயர் காரணம் உண்டு.

தமிழகத்தின் உயிர்நாடி

Longest river in tamilnadu,தமிழகத்தின் லட்சக்கணக்கான மக்களின் உயிர்நாடியாக காவிரி நதி உள்ளது. இது 2 மில்லியன் ஹெக்டேர் நிலங்களுக்கு பாசனத்திற்கு நீரை வழங்குகிறது, மேலும் மாநிலத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்த நதி பல்வேறு வகையான மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களுக்கு தாயகமாகவும் உள்ளது. மேலும் இது உள்ளூர் சமூகங்களுக்கு புரதத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது.

புனித நதி

Longest river in tamilnadu,காவிரி நதி அதன் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்துடன் கூடுதலாக, இந்து மதத்தில் ஒரு புனித நதியாகும். இந்த நதி பிரம்மா கடவுளால் உருவாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது, மேலும் இது பல இந்து புராணங்கள் மற்றும் இதிகாசங்களுடன் தொடர்புடையது. இந்த நதி ஒரு பிரபலமான யாத்திரை தலமாகவும் உள்ளது, மேலும் அதன் கரையில் பல கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டுள்ளன.

காவிரி நதி தமிழ்நாட்டின் இன்றியமையாத வளமாகும். இது மாநிலத்தின் பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரத்திற்கு இன்றியமையாதது. நதி மாசுபாடு, அதிகப்படியான பிரித்தெடுத்தல் மற்றும் காலநிலை மாற்றம் உட்பட பல சவால்களை எதிர்கொள்கிறது. இருப்பினும், வருங்கால சந்ததியினரின் நலனுக்காக காவிரி நதியை பாதுகாத்து நிர்வகிப்பது முக்கியம்.


தமிழகத்தின் நீண்ட ஆறு

Longest river in tamilnadu,கர்நாடக மாநிலத்தின் குடகு மலையில் உற்பத்தியானாலும் அது சமவெளி பகுதியில் நீண்ட தூரம் பாய்வது தமிழகத்தில் தான் .அதனால் தான் காவிரி தமிழகத்தின் நீண்ட ஆறு என்ற பெருமைக்குரியதாக உள்ளது. காவிரி ஆறு பாயும் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள் தமிழக்தின் டெல்டா மாவட்டங்கள் என அழைக்கப்படுகிறது.


டெல்டா பாசனம்

Longest river in tamilnadu,கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்குள் ஒகேனக்கல் வழியாக சீறி வரும் காவிரி நீர் தமிழகத்தின் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் சேகரிக்கப்படுகிறது. பின்னர் அந்த தண்ணீர் மாயனூர்,திருச்சி முக்கொம்பு அணைக்கட்டுகள் வழியாக கரிகாற்சோழ மன்னன் கட்டிய கல்லணையை அடைகிறது. கல்லணையில் இருந்து வெண்ணாறு, வெட்டாறு, கல்லணைக்கால்வாய், காவிரி ஆகிய நான்கு வாய்க்கால்கள் மூலம் டெல்டா மாவட்ட பாசனத்திற்கு திறந்து விடப்படுகிறது.

17 கிளை வாய்க்கால்கள்

காவிரி ஆறு மூலம் டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய மூன்று பருவங்களில் நெற்பயிர்கள் விளைந்து வருகிறது. அந்த வகையில் டெல்டா மாவட்ட மக்களின் உயிர்நாடியாக காவிரி ஆறு விளங்குகிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி பூம்புகார் கடலில் கலக்கும் பகுதி வரை 17 கிளை வாய்க்கால்களாக பிரிந்து மக்களின் தாகத்தை தீர்ப்பதோடு நெல், வாழை, கரும்பு போன்ற பயிர்களின் சாகுபடிக்கு நீராதரமாகவும் விளங்குகிறது.

Longest river in tamilnadu,டெல்டா மாவட்ட பயிர் சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன்மாதம் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவேண்டும் என்பது அரசு விதியாகும். ஆனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் தண்ணீர் காலதாமதமாக திறக்கப்படுவதும் உண்டு. இந்த ஆண்டு ஜூன் 12ந்தேதி திறந்து விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


சட்டப்பிரிச்சினை

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகத்திற்கும் கர்நாடக மாநிலத்திற்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்தது. நீண்ட கால சட்ட போராட்டத்திற்கு பின்னர் உச்ச நீதி மன்ற உத்தரவின் படி காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் படி தற்போது கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கி வருகிறது என்பது கூடுதல் தகவலாகும்.

ஏழு புனித நதிகளில் ஒன்று

Longest river in tamilnadu,*பண்டைய இந்து இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் இந்த நதி குறிப்பிடப்பட்டுள்ளது.

*காவிரி ஆறு ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும், மேலும் அதன் அழகிய இயற்கைக்காட்சிகள் மற்றும் அதன் பல கோவில்கள் மற்றும் கோவில்கள் ஆகியவற்றிற்காக அறியப்படுகிறது.

*இந்த நதி மீன்பிடித்தல் மற்றும் படகு சவாரி செய்வதற்கும் பிரபலமான இடமாகும்.

*காவேரி நதி தமிழ்நாட்டின் மதிப்புமிக்க சொத்து. வருங்கால சந்ததியினரின் நலனுக்காக நதியை பாதுகாத்து நிர்வகிப்பது முக்கியம்.


பொன்னியும் நானே காவிரியும் நானே

Longest river in tamilnadu,காவிரி ஆறுக்கு பொன்னி நதி என்ற இன்னொரு பெயரும் உண்டு. காவிரி ஆறு நடந்தாய் வாழி காவிரி என வர்ணிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ம் தேதி தமிழக மக்கள் ஆடிப்பெருக்கு விழாவினை கொண்டாடி வருகிறார்கள். ஆடிப்பெருக்கின்போது தமிழகத்தில் காவிரி கரையோர மாவட்டங்களான சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை, நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் காவரி தாய்க்கு சிறப்பு பூஜைகள் நடத்தி தீபாராதனை செய்து வழிபடுவதும் பண்டைக்காலம் தொட்டு நடந்து வருகிறது.

ஆடிப்பெருக்கில் காவிரி

Longest river in tamilnadu,திருச்சி காவிரி கரை அம்மா மண்டபம் படித்துறையில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவின் போது 108 திவ்ய தேசங்களில் முதன்மை தேசமாக புகழப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தின் உற்சவர் காவிரி தாய்க்கு சீர் செனத்தியுடன் மங்கல பொருட்களை வழங்கும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது. இதற்காக மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பட்டு காவிரி கரையின் அம்மா மண்டபம் படித்துறையில் எழுந்தருள்வதும் இன்றளவும் ஒரு ஆன்மிக நிகழ்வாக நடந்து வருகிறது.

Tags

Next Story