குழந்தை திருமணங்களை தடுக்க கோவை மாவட்டத்தில் விழிப்புணர்வு

ஆண்களுக்கு 21, பெண்களுக்கு 18 வயது என திருமண வயதினை அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால், பெற்றோரின் அவச ரத்தாலும், பல்வேறு காரணங்களாலும் 18 வயதுக்கு முன்னதாகவே சிறுமிகளுக்கு திருமணம் நடத்தப்படும் நிகழ்வுகள் தற்போதும் தொடர்கின்றன. கோவை மாவட்ட நிர்வாகத்தின் கணக்கின்படி, குழந்தை திருமணங்கள் தொடர்பாக கோவையில் கடந்த 2019-ம் ஆண்டு 58 நிகழ்வுகள், 2020-ம் ஆண்டு 30 நிகழ்வுகள், 2021-ம் ஆண்டு 99 நிகழ்வுகள், 2022-ம் ஆண்டு 109 நிகழ்வுகள் நடந்துள்ளன.
இதில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் திருமணங்கள் நடக்கும் முன்பே தடுத்து நிறுத்தப்பட்டு விட்டன. நடப்பாண்டு ஜனவரி மாதம் 6 நிகழ்வுகள், பிப்ரவரி மாதம் 17 நிகழ்வுகள் நடந்துள்ளன. ஜனவரி மாதம் 3 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. 3 திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி மாதம் 10 திருமணங்கள் நடந்துள்ளன. 7 திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் (பொறுப்பு) ஆண்டாள் கூறியதாவது: குழந்தை திருமணங்களை தடுக்க தடுப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம். குழந்தை திருமணங்கள் செய்பவர்கள், அதை ஏற்பாடு செய்பவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கிறோம். சிறுமியின் கணவர், பெற்றோர் என இதில் தொடர்புடையவர்கள் மீது குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளில் போலீசாரால் வழக்கு பதியப்படுகிறது.
மாவட்டத்தில் ஊரக பகுதியில் உள்ள, ஒவ்வொரு கிராமத்திலும் கிராம கண்காணிப்புக் குழு ஏற்படுத்தியுள்ளோம். அதில், அந்த கிராமத்தின் விஏஓ, மகளிர் திட்ட அலுவலர், சமூக நலத்துறையினர், காவல் துறையினர், கிராம ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர் ஆகியோர் உள்ளனர். இவர்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu