/* */

அரியலூர்- கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞரின் சடலம் மீட்பு

புத்தாண்டை கொண்டாடுவதற்காக சென்ற இளைஞர் கௌதம் கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.

HIGHLIGHTS

அரியலூர்- கொள்ளிடம்  ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞரின் சடலம் மீட்பு
X

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக, மூன்று இளைஞர்கள் குளித்துவிட்டு ஆற்றைக் கடந்த போது, துறையூரைச் சேர்ந்த கௌதம் என்பவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள கோழி பண்ணையில், துறையூரை சேர்ந்த இளைஞர் கெளதம் சுமார் 25 வயது மதிக்கத்தக்கவர் வேலை பார்த்து வந்த நிலையில். ஞாயிறு வேலை முடித்து நண்பர்களுடன், மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்கு சென்றுள்ளனர். ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்ற நிலையில் நீச்சல் தெரியாத காரணத்தினால், நண்பர்கள் கண் முன்னே தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

கடந்த இரண்டு நாட்களாக ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறை அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தா.பழூர் காவல்துறையினர் கொள்ளிடம் ஆற்றில் காணாமல்போன கௌதமை, ரப்பர் படகு மூலம், பாதுகாப்பு உடை அணிந்து கரை ஓரங்களிலும் தீவிரமாக இரண்டாவதாக நாளாக தேடி வந்தனர்.

மூன்றாவது நாளான இன்று காலை, அவரது உடல் வாழைகுறிச்சி கிராமம் அருகே மிதந்ததைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தா.பழூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 Jan 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்