12-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பிச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் தமிழ்ச்செல்வன் (25) கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பம் ஆனார். இந்நிலையில் வயிறு பெரிதாகி கால் வீக்கம் ஏற்பட்டதால் பெற்றோர்கள் அவரை மருத்துவமனையில் காண்பித்துள்ளனர்.
அப்போது சிறுமி 6 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமி தங்கள் பெற்றோர்களிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். பின்னர் இதுபற்றி சிறுமி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிந்து தமிழ்ச்செல்வனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu