/* */

12-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

ஜெயங்கொண்டம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

12-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
X
கைது செய்யப்பட்ட தமிழ்ச்செல்வன்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பிச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் தமிழ்ச்செல்வன் (25) கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பம் ஆனார். இந்நிலையில் வயிறு பெரிதாகி கால் வீக்கம் ஏற்பட்டதால் பெற்றோர்கள் அவரை மருத்துவமனையில் காண்பித்துள்ளனர்.

அப்போது சிறுமி 6 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமி தங்கள் பெற்றோர்களிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். பின்னர் இதுபற்றி சிறுமி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிந்து தமிழ்ச்செல்வனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 28 April 2022 7:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  2. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  9. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்