/* */

மாரியம்மன் கோயிலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டை மாரியம்மன் கோயிலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

மாரியம்மன் கோயிலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
X

காசாங்கோட்டை கிராமத்தில் கோயிலை சீரமைக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.


விக்கிரமங்கலம் அடுத்த காசாங்கோட்டையில் பழமைவாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலின் முகப்பு பகுதிகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலகத்தில் தொடர்ந்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், கோயிலை சீரமைக்க அனுமதி அளித்தால் கூட போதும், அதற்கு உரிய செலவை கிராம மக்களே ஏற்போம் எனவும், கோயிலை சீரமைக்க நடவடிக்கை வேண்டியும் கிராம மக்கள் கோயில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபடுவதால் பாதிக்கப்படுவது நம் மக்கள் எனக்கூறி தாமாகவே சாலை மறியலை கைவிட்டு, கிராம நிர்வாக அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்துச் சென்றனர்.

Updated On: 26 Feb 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...