/* */

கோவில்களில் திருட்டு, தொடர் கொள்ளை பொதுமக்கள் அச்சம் ..!

அரியலூர் மாவட்டத்தில் குறிப்பாக ஜெயங்கொண்டம் பகுதியில் பல்வேறு கிராமங்களில் தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

HIGHLIGHTS

கோவில்களில் திருட்டு, தொடர் கொள்ளை பொதுமக்கள் அச்சம் ..!
X

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சம்போடை என்ற கிராமத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் புகுந்த மர்ம நபர்களால் சாமி சிலை மற்றும் உண்டியல் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கோயிலுக்கு வழக்கம்போல் வந்த கோயில் பணியாளர்கள் கோயில் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் 3 சவரன் தாலி மற்றும் உண்டியல் பணம் கொள்ளை போனது கிராமத்தில் உள்ள பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு கோவில்களில் கொள்ளை போன சம்பவம் குறித்து கிராம மக்கள் புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் குறிப்பாக ஜெயங்கொண்டம் பகுதியில் பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

Updated On: 12 May 2022 6:48 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  2. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  3. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  4. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  5. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  6. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  8. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து