/* */

கிராமத்திற்குள் புகுந்த 2 மான்கள் மீட்பு

குடியிருப்பு பகுதிக்குள் தவறி வந்த 2 புள்ளி மான்களை இளைஞர்கள் உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

கிராமத்திற்குள் புகுந்த 2 மான்கள் மீட்பு
X

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கொள்ளிடம் ஆற்றின் அருகே காட்டுப்பகுதி உள்ளது. இங்கு புள்ளிமான்கள், மயில்கள் உள்ளிட்டவை அதிக அளவில் வசித்து வருகின்றன.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தண்ணீரை தேடி வேணாநல்லூர் கிராமத்திற்குள் 3 மாத பெண் மான் குட்டி ஒன்று நுழைந்துள்ளது. அப்போது மனைப்பகுதியில் கம்பிவேலியில் நுழைந்தபோது அதில் சிக்கி தவித்து வந்தது. இதனை கண்ட இளைஞர்கள் உடனடியாக மீட்டனர்.

அதேபோல இரண்டு வயதுடைய பெண் மான் ஒன்று மைக்கேல்பட்டி கிராமத்தின் சாலையில் சென்று வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்த கம்பியில் சிக்கிய நிலையில் கிடந்தது. இதனையும் அப்பகுதி இளைஞர்கள் மீட்டனர். இவர்கள் அளித்த தகவலின்படி வனத்துறை அதிகாரி சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர், மாற்றம் தா.பழூர் காவல்துறையினர் விரைந்து வந்து இரண்டு மான்களையும் மீட்டு சிகிச்சை அளித்து வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.


Updated On: 30 April 2021 6:44 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...