/* */

தா. பழூர் அருகே சேறும் சகதியுமான சாலையில் சடலத்துடன் மக்கள் படும் அவதி

தா.பழூர் அருகே இருகையூரில் சேறும் சகதியுமான சாலையில் மக்கள் சடலத்தை எடுத்து செல்ல மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள்.

HIGHLIGHTS

தா. பழூர் அருகே சேறும் சகதியுமான சாலையில் சடலத்துடன் மக்கள் படும் அவதி
X

தா. பழூர் அருகே இருகையூர் காலனியில் மயானத்திற்கு சடலத்தை எடுத்து செல்லும் பாதையில் சேற்றில் வழுக்கி விழும் நிலை உள்ளது.


அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இருகையூர் கிராமம் காலனி தெருவில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் யாரேனும் இறக்க நேரிட்டால் அவர்களது உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு சுமார் 1 கி.மீ. தூரம் மண் சாலையில் நடந்து சென்றாகவேண்டும். தற்போது வரை மயானத்திற்கு செல்வதற்கு சரியான சாலை வசதிகள் இல்லாத நிலை உள்ளது.

ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. மேலும் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக இருப்பதால் மயானத்திற்கு செல்லும் பாதையில் இறந்தவரின் உடலை சுமந்து செல்பவர்கள் மட்டுமின்றி நடந்து செல்பவர்கள் என அனைவரும் சேற்றில் வழுக்கி விழுந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இது குறித்து பலமுறை பஞ்சாயத்து அலுவலகத்தில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக தன்ராஜ் (75) என்பவர் இறந்த நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் போது சேற்றில் பலர் வழுக்கி விழுந்தனர்.

இது போன்ற சம்பவம் மழைக்காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெறுவதாகவும் இதற்கான தீர்வு என்பதே இதுவரை இப்பகுதி மக்களுக்கு கிடைக்கவில்லை என மக்கள் தெரிவித்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இடுகாட்டிற்கு சாலை வசதி செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 16 Nov 2021 6:47 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...