Begin typing your search above and press return to search.
விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதை எம்.எல்.ஏ. கண்ணன் பார்வையிட்டார்
ஆயுதகளம் கிராமத்தில் விவசாய நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் பார்வையிட்டார்.
HIGHLIGHTS
ஜெயங்கொண்டம் ஒன்றியம், உட்கோட்டை ஊராட்சி, ஆயுதகளம் கிராமத்தில்,பொன்னேரியில் இருந்து செல்லும் வடிகால் ஓடை தண்ணீர் விவசாய நிலங்களிலும்,காலனி சுடுகாடு செல்லும் வழியிலும் சூழ்ந்துள்ளதை எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் பார்வையிட்டார்.
உடன் ஒன்றிய தி.மு.க.செயலாளர் இரா மணிமாறன் , தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.குலோத்துங்கன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பிரிதிவிராஜன், சிவக்குமார், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் பாலமுருகன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.