/* */

சதுரங்க போட்டியினை தொடங்கி வைத்தார் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.கண்ணன்

சதுரங்க போட்டியினை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

HIGHLIGHTS

சதுரங்க போட்டியினை தொடங்கி வைத்தார் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.கண்ணன்
X

ஜெயங்கொண்டம் ஒன்றிய வட்டார அளவிலான சதுரங்க போட்டியினை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்.


ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பாக 44-வது சதுரங்க ஒலிம்பியாட் -2022 போட்டியை முன்னிட்டு, ஜெயங்கொண்டம் ஒன்றிய வட்டார அளவிலான சதுரங்க போட்டியினை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் க.ராஜ்குமார் வரவேற்புரையாற்றினார். இறுதியாக உடற்கல்வி இயக்குனர் முனைவர் இரா.வேல்முருகன் நன்றி கூறினார். இப்போட்டியில் வட்டார அளவிலான 34 பள்ளிகளிலிருந்து 198 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் நகராட்சி தலைவர் சுமதி சிவகுமார், நகராட்சி துணை தலைவர் வெ.கொ.கருணாநிதி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சா.இராஜேந்திரன், உடையார்பாளையம் கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் ஆ.செல்வகுமார் மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 20 July 2022 12:08 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்