அரியலூர் மாவட்டம் தத்தனூர் கல்லூரியில் இந்திய அளவிலான நெட்பால் போட்டி
தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலைஅறிவியல் கல்லூரியில் இந்திய அளவிலான நெட்பால் போட்டிகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை அறிவியல் கல்லூரியில், 21 மாநிலங்களில் இருந்து 72 அணிகள் பங்கேற்று நடைபெறும், இந்திய அளவிலான நெட்பால் போட்டிகளை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் செல்வம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா,எம்.ஆர்.சி. கல்வி நிறுவனத் தாளாளர் இரகுநாதன், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் இரா.மணிமாறன், உடையார்பாளையம் பேரூர் கழக செயலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu