/* */

அரியலூர்: சிறுமியை திருமணம் செய்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது

அரியலூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அரியலூர்: சிறுமியை திருமணம் செய்த  டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
X
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிரசாத்

அரியலூர் மாவட்டம் கட்சிபெருமாள் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, தனது பெற்றோர்கள் இறந்துவிட்ட நிலையில் பாட்டியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியின் அக்காவை திருமணம் செய்த சுரேஷ், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டாடாஏஸ்வாகன டிரைவர் பிரசாத் என்பவர் சிறுமியை திருமணம் செய்துகொண்டதாக கிடைத்த தகவலின்பேரில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜெயங்கொண்டம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவ்வழக்கை பதிவு செய்து பிரசாத் என்பவரை போக்சோ சட்டத்தில் ஜெயங்கொண்டம் மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடப்பதற்கு முன்பாகவே, சுரேஷ் என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது விசாரனையில் தெரியவந்ததையடுத்து சிறுமியிடம் பெற்ற புகாரின் பேரில் சுரேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். 17வயது சிறுமிமீது அக்கா கணவர் பாலியல் வன்முறை மற்றும் திருமணம் என்ற இரு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது இப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 19 Oct 2021 5:04 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  2. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  3. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  4. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  5. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  9. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  10. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?