/* */

விசிறி விற்கும் மூத்த தம்பதிக்கு மளிகைபொருள்கள் வழங்கிய அரியலூர் எஸ்பி

விசிறி விற்பனை செய்யும் தம்பதியருக்கு, அரியலூர் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் அரிசி, மளிகை பொருட்களை வழங்கினார்.

HIGHLIGHTS

விசிறி விற்கும் மூத்த தம்பதிக்கு மளிகைபொருள்கள் வழங்கிய அரியலூர் எஸ்பி
X

விசிறி விற்பனை செய்யும் வயதான தம்பதியருக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மளிகை பொருட்கள் வழங்கினார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் கிராமத்தில் வசித்து வருபவர் குஞ்சிதபாதம். இவரது மனைவி வசந்தா இருவரும் வயதான தம்பதியர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாத நிலையில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். தாங்கள் உயிர்வாழ விசிறி செய்து அதை விற்பனை செய்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த நிலையில், விசிறி விற்பனை இல்லாததால் வருமானம் இன்றி தவித்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், தா.பழூர் தோப்பு தெருவில் உள்ள குஞ்சிதபாதம் - வசந்தா தம்பதியரை நேரில் சந்தித்து நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள், பாய் தலையணை, பிளாஸ்டிக் வாலி உள்ளிட்டவைகளை வழங்கினார். மேலும் தா.பழூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெகதீசன் தேவையான உதவிகளை செய்வார் என உத்தரவாதம் கொடுத்தார். குஞ்சிதபாதம் மற்றும் வசந்தா தம்பதியினர் மாவட்ட காவல்துறைக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Updated On: 30 May 2021 8:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க