/* */

சாலையில் சென்ற கார் திடீரென எரிந்தது நாசம் 5 பேர் உயிர் தப்பினர்

சாலையில் சென்ற கார் திடீரென தீ பிடித்து எரிந்து நாசமானது. இதில் இருந்த 5 பேர் அதிர்ஸ்ட வசமாக உயிர் தப்பினர்.

HIGHLIGHTS

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பயம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் கும்பகோணத்திலிருந்து சேலம் செல்வதற்காக கார் ஒன்றில் இன்று குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாச்சலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கல்லாத்தூர் அருகே சென்றபோது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதில் அதிர்ச்சி அடைந்த காரில் இருந்த 5 பேர் காரின் கதவைத்திறந்து வெளியே வந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் காரில் பொருத்தப்பட்ட ஏசியின் கியாஸ் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினர் காரில் எரிந்து கொண்டிருந்த தீயினை அணைத்தனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 22 April 2021 8:51 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  2. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  3. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  5. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  6. உசிலம்பட்டி
    மதுரை அருகே ,வயலில் சாக்கடை நீர் கலப்பா? பொதுமக்கள் ஆவேசம்!
  7. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  8. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  9. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  10. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்