/* */

குடிநீருக்காக அவதிப்படும் மணப்பத்தூர் ஊராட்சி கிராம மக்கள்

சித்துடையார் கிராமத்தில் கடந்த ஏழு நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் இல்லாமல் கிராம மக்கள் அவதிபடுகின்றனர்.

HIGHLIGHTS

குடிநீருக்காக அவதிப்படும் மணப்பத்தூர் ஊராட்சி கிராம மக்கள்
X

குடிநீருக்காக அல்லல்படும் பொதுமக்கள். 

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியம் மணப்பத்தூர் ஊராட்சியில் சோழன்குடிக்காடு, நந்தியன்குடிக்காடு, நத்தகுழி, படைவெட்டிகுடிக்காடு, சித்துடையார், உகந்தநாயகன்குடிக்காடு, மணப்பத்தூர் என ஏழு சிற்றூர்கள் அமைந்துள்ளது. காலை, மாலை என இரண்டு வேளை முறையாக குடிநீர் விநியோகம் இல்லாமல் கிராம பொதுமக்கள் அவதியுறும் அவலம் தொடர்கிறது. குறிப்பாக சித்துடையார் கிராமத்தில் கடந்த ஏழு நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் இல்லாமல் தனிநபர் மின்மோட்டார் மூலம் நீர் பிடித்து கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அல்லல்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கிராம பொதுமக்கள் அவலநிலையை போக்கி காலை, மாலை என இரண்டு வேளை முறையாக குடிநீர் விநியோகம் அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 12 March 2022 7:10 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!