/* */

a temple without foundation-உலகமே வியக்கும் அடித்தளமே இல்லாத ஒரு கோவில்..? எங்கே..? தெரிஞ்சுக்கங்க..!

a temple without foundation -அடித்தளம் இல்லாத கட்டிடங்கள் நீண்டகாலத்திற்கு நிலையாக இருக்கமுடியாது என்பது நாமறிந்த ஒன்றே. ஆனாலும் அடித்தளம் இல்லாமல் பிரம்மாண்ட கட்டிடம் உள்ளது. அது எங்கே..?

HIGHLIGHTS

a temple without foundation-உலகமே வியக்கும் அடித்தளமே இல்லாத ஒரு கோவில்..? எங்கே..? தெரிஞ்சுக்கங்க..!
X

-பெரிய கோவில் (கோப்பு படம்)

ஒரு சாதாரண சிறிய வீடு கட்டுவதற்குக் கூட அஸ்திவாரம் இல்லாமல் காட்டமுடியாது. ஆனால், அஸ்திவாரமே இல்லாமல் நம்ம நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு கோவில் இருக்கே தெரியுமா..? இந்த உலகையே திரும்பிப்பார்க்க வைத்த அதிசயம்.

உலகில் ஏழு அதிசயங்கள் என்று கூறப்பட்டுள்ள கட்டிடங்களில் எல்லாம் இப்படி ஒரு அதிசியம் இல்லை. ஆனால், இதுமட்டும் உலக அதிசயங்களில் இடம்பெறவில்லை. எப்படி? சிந்திக்கவேண்டியுள்ளது..?

a temple without foundation

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அஸ்திவாரம் இல்லாத கோவில் எங்கே உள்ளதுன்னு யோசிக்கிறீர்களா..? அது நம்ம தமிழ்நாட்டிலதாங்க இருக்கு. இந்த நவீன தொழில்நுட்ப யுகத்தில் அஸ்திவாரம் தோண்டாமல் வானளாவிய கட்டிடம் கட்டுவதை கற்பனை செய்ய முடியுமா? இல்லை நீங்கள்தான் பார்த்திருக்கிறீர்களா..?

ஆனால், நம்ம தமிழ்நாட்டில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அப்படி ஒரு கட்டிடம் கட்ட எம்மிடம் அறிவு இருந்திருக்கிறது. நம்ம தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில்தாங்க அந்த அதிசயம். அடித்தளமே இல்லாத பிரமாண்ட கோவில்.

அது இன்டர்லாக் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் கட்டுமானத்தில் கற்களுக்கு இடையில் சிமென்ட், பிளாஸ்டர் அல்லது எந்தவிதமான பிசின் பொருட்களும் பயன்படுத்தப்படவில்லை. இருப்பினும் இது கடந்த 1000 ஆண்டுகளில் 6 பெரிய பூகம்பங்களில் இருந்து தப்பித்து இன்று அதன் அசலான வடிவத்தில் அப்படியே உள்ளது..

a temple without foundation

216 அடி உயரமுள்ள இந்தக் கோயில்தான் அப்போது உலகிலேயே மிக உயரமான கோயிலாக இருந்தது. கட்டப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு கட்டப்பட்ட பைசா சாய்ந்த கோபுரம், மோசமான பொறியியல் காரணமாக காலப்போக்கில் சாய்ந்து வருகிறது. ஆனால் பிரகதீஸ்வரர் கோயில், பைசாவின் சாய்ந்த கோபுரத்தை விட பழமையானது. அதன் அச்சில் ஒரு டிகிரி கூட சாயவில்லை.

3000 யானைகள் 60 கி.மீ தூரம் சுமந்து சென்ற இந்த கோவிலின் கட்டுமானத்தில் 1.3 லட்சம் டன் கிரானைட் பயன்படுத்தப்பட்டது. இந்த கோவில் நிலத்தை தோண்டாமல் கட்டப்பட்டுள்ளது. அதாவது இந்த கோவில் அடித்தளம் இல்லாத கோவில்.

கோயில் கோபுரத்தின் உச்சியில் உள்ள கோபுர பீடக்கல் 81 டன் எடை கொண்டது. இன்றைய காலகட்டத்தில் நவீன இயந்திரங்கள் 81 டன் எடையுள்ள கல்லை இவ்வளவு உயரத்திற்கு கொண்டுசெல்ல தவறிவிடுகின்றன. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத அந்த காலத்திலேயே அது சாத்தியமானது.

பிரகதீஸ்வரர் கோவிலின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட பொறியியல் அளவை உலகின் ஏழு அதிசயங்களில் ஏதேனும் ஒன்றைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூட ஒப்பிட முடியாது. மேலும் இன்றைய தொழில்நுட்பங்களைப் பொறுத்தவரை, அத்தகைய கட்டுமானம் எதிர்காலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு சாத்தியமாகும். ஆனால், பிரகதீஸ்வரர் கோவிலின் கட்டிட நுணுக்கங்கள் இது வரை இன்னும் சாத்தியமாகவில்லை என்பதே எமக்கான பெருமை.

Updated On: 30 April 2023 12:41 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு