/* */

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், மத்திய அமைச்சர்பியூஸ் கோயல் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

HIGHLIGHTS

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
X

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான உலக முதலீட்டாளர் மாநாடு தொடங்கியது.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிறது. இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பல்வேறு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வரத்தக மையத்தில் இன்று தமிழ்த்­தாய் வாழ்த்­து­டன் உலக முதலீட்டாளர்கள் மாநாடு துவங்­கியது. தமிழக தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா வர­வேற்­புரை வழங்கினார். பின்னர் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்டை தொடங்கிவைத்து உரை­யாற்­றினார்.

இந்த மாநாட்டில் மத்திய தொழில்­துறை அமைச்­சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்­தி­ன­ராக பங்­கேற்றார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசை வழங்கினார். இந்த மாநாட்­டில் தொழில்­கள் அடிப்­ப­டை­யி­லான பல்­வேறு தனித்­தனி அமர்­வு­கள் நடத்­தப்­ப­ட உள்ளன. ஜவுளி, காலணி தொழில்­கள், மின்­சார வாக­னங்­கள் மற்றும் வேளாண் தொழில்­நுட்­பங்­கள் உள்­ளிட்ட பல்­வேறு அமர்­வு­கள் 2 நாட்­க­ளும் நடைபெறுகிறது.

மாநாட்­டின் தொடக்க விழாவான இன்று பள்ளி, கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு ஒளிப­ரப்ப மாவட்ட ஆட்­சி­யர்­கள் மூலம் ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்ளன. இந்த மாநாட்­டின் 2ம் நாளான நாளை பல்­வேறு நாடு­க­ளின் தொழில்­நி­று­வ­னங்­கள் தமிழக அர­சு­டன் புரிந்து­ணர்வு ஒப்­பந்­தங்­க­ளில் கையெ­ழுத்­திட உள்­ளன.

ஏற்கனவே உலகப் புகழ் பெற்ற அடிடாஸ் நிறுவனத்துடன் புரிந்து ஒப்பந்தம் முடிவாகியுள்ளது அறிவிப்பு வெளியானது. அதன் விளைவாக அடிடாஸ் நிறுவனத்தின் “திறன் மற்றும் மேம்பாட்டு மையம்” சென்னையில் அமைக்கப்பட உள்ளது. சீனாவிற்கு பிறகு அதன் அடிடாஸ் நிறுவனம் ஆசியாவிலேயே சென்னையில்தான் அமைய உள்ளது.

இந்த நிலையில் 5.50லட்சம் அளவுக்கு முதலீகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டின் மூலம் 1ட்ரில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டின் தொடக்கமாக 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் நிறுவனங்கள்:

  • ஹூண்டாய் நிறுவனம் - ரூ. 6,000 கோடி முதலீடு; காஞ்சிபுரத்தில் - ரூ.1,100 கோடி முதலீடு
  • குவால்காம் - ரூ.177 கோடி முதலீடு - 1,600 பேருக்கு வேலைவாய்ப்பு
  • அமெரிக்க சோலார் தயாரிப்பு நிறுவனம் ரூ. 2,500 கோடி முதலீடு - முதற்கட்டமாக 350 பேருக்கு வேலைவாய்ப்பு; காஞ்சிபுரத்தில் ரூ.5,600 கோடி முதலீடு
  • கோத்ரேஜ் - ரூ. 515 கோடி முதலீடு - 446 பேருக்கு வேலைவாய்ப்பு - செங்கல்பட்டு
  • டாடா எலெக்ட்ரானிக்ஸ் ரூ.12,082 கோடி - 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு - கிருஷ்ணகிரி
  • பெகாட்ரான் - ரூ. 1,000 கோடி முதலீடு- 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு
  • ஜேஎஸ்டபுள்யூ JSW -12,000 கோடி - தூத்துக்குடி
  • டிவிஎஸ் குழுமம் - ரூ.5,000 கோடி முதலீடு - 500 பேருக்கு வேலைவாய்ப்பு
  • மிட்சுபிஷி - ரூ.200 கோடி - கும்மிடிப்பூண்டி
  • AP Moller Maersk
  • Vinfast ரூ.16,000 கோடி முதலீடு - தூத்துகுடி

இந்த மாநாட்டில் உரை­யாற்­றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளிநாடுகளுக்கு போகும் போது கோட் சூட் அணிவது வழக்கம், எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளாதால் இன்று கோட் சூட் அணிந்துள்ளேன். சென்னையில் இன்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது.

அதே போல இந்த மாநாட்டின் மூலம் முதலீடுகளும் மழையாக பெய்யும் என நம்புகிறேன். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வந்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த மத்திய அமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். பல்வேறு வகையில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அமெரிக்கா, சிங்கபூர் உள்ளிட்ட 9 நாடுகள் பங்குதாரர்களாக இணைந்துள்ளன.

பொருளாதார வளர்ச்சியில் அதிவிரைவு வேகத்தில் தமிழ்நாடு பயணிக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றன. நாளைய தொழிற் மாற்றங்களை கணித்து வைத்துள்ளோம். பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பெரியார், அண்ணா, கருணாநிதியை தொடர்ந்து சமூக , பொருளாதார அரசியல் முன்னேற்றத்தில் பெண்களை முன்நிறுத்தி வருகிறோம்.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் 200க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. தமிழ்நாட்டில் முதலீடு செய்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் அனைவரையும் தமிழக அரசு மதிக்கும். இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Updated On: 7 Jan 2024 8:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  2. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  3. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  4. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  5. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  6. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  7. வீடியோ
    தாமரைக்கும் வாக்களிக்கும் மழலை ! #modi #pmmodi #bjp...
  8. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  9. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  10. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...