நாங்கள் மோடி கூட்டணியில் தொடர்கிறோம்: மதுரையில் ஓ.பி.எஸ். பரபரப்பு பேட்டி

நாங்கள் மோடி கூட்டணியில் தொடர்கிறோம்: மதுரையில் ஓ.பி.எஸ். பரபரப்பு பேட்டி

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மதுரையில் பேட்டி அளித்த காட்சி.

நாங்கள் மோடி கூட்டணியில் தொடர்கிறோம் என்று மதுரையில் ஓ.பி.எஸ். பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.

நாங்கள் பிரதமர் மோடி கூட்டணியில் தொடர்கிறோம் என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மதுரையில் அளித்த பேட்டியில் கூறினார்.

தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்தார் ஓ பன்னீர்செல்வம்.

அப்போது அதிமுக கூட்டணி குறித்து அமித்ஷா கூறியிருப்பது பற்றிய கேள்விக்கு அது மத்திய உள்துறை அமைச்சரின் பெருந்தன்மையை காட்டுகிறது என்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும் என மோடி கூறி இருப்பது பற்றிய கேள்விக்கு அவரவர் கட்சியை உயர்த்தி காண்பிப்பது அந்தந்த தலைவர்களின் பண்பாடு. உறுதியாக பாஜக கூட்டணி இந்தியாவை ஆளுகிற தனி பெரும்பான்மை பெறும் என்றார்.

எல்.முருகன் மத்திய அமைச்சராக தகுதி இல்லை என டி.ஆர்.பாலு கூறி இருப்பது குறித்த கேள்விக்கு அந்த செய்தியை நான் முழுமையாக பார்க்கவில்லை பார்த்த பிறகு கூறுகிறேன் என்றார்.

உங்கள் பின்னால் இருப்பவர்கள் கூலி ஆட்கள் உண்மையான அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறி இருக்கிறாரே என கேட்டதற்கு உண்மையான கூலி ஆட்கள் யார் என்பது நாடாளுமன்றத் தேர்தலில் தெரியும் என்றார்.

அமித்ஷா குறிப்பிட்டது உங்கள் அணியையா? எடப்பாடி அணியையா என்ற கேள்விக்கு நாங்கள் தொடர்ந்து மோடியின் கூட்டணியில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறோம். விலகி இருப்பது பழனிச்சாமி தான் என்றார். மேலும் எத்தனை இடங்களில் உங்கள் அணி போட்டியிடும் என்ற கேள்விக்கு உறுதியாக உங்களிடம் சொல்வேன் என்றார்.

Tags

Next Story