/* */

அண்ணனுடன் கைகோர்க்கிறாரா வருண்காந்தி?

பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட வருண் காந்திக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

HIGHLIGHTS

அண்ணனுடன் கைகோர்க்கிறாரா  வருண்காந்தி?
X

வருண் காந்தி(கோப்பு படம்)


இந்திரா காந்தியின் இளைய மகனான மறைந்த சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி. இவரது மகன் வருண் காந்தி. இவர்கள் வாஜ்பாய் காலத்தில் இருந்தே பாஜகவில் உள்ளனா். பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் பதவியையும் வருண் காந்தி முன்பு வகித்துள்ளார். இந்நிலையில், தொடா்ந்து மூன்று முறை பாஜக எம்.பி.யாக இருந்த வருண் காந்திக்கு இந்த முறை அக்கட்சித் தலைமை தொகுதி ஒதுக்கவில்லை.

அண்மைக் காலமாக அவா் பாஜக மத்திய தலைமையை விமா்சித்து வந்தார். கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். அமேதியில் சஞ்சய் காந்தி மருத்துவமனை உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் உத்தர பிரதேச பாஜக அரசையும் அவா் விமா்சித்தார். மேலும், கடந்த ஆண்டு கேதார்நாத்தில் காங்கிரஸ் எம்.பி.யும் தனது அண்ணனுமான (பெரியப்பா மகன்) காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை அவா் சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் ராகுல்காந்திக்கும், வருண்காந்திக்கும் இடையே மீண்டும் குடும்ப நட்பு துளிர்த்துள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகளால் பாஜக தலைமைக்கு வருண் காந்தி மீது ஏற்பட்ட அதிருப்தியே அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. வருண்காந்திக்கு பா.ஜ.க.,வில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது அண்ணனிடம் இருந்து அதாவது காங்., கட்சியிடம் இருந்து வருண் காந்திக்கு அழைப்பு வந்துள்ளது.

Updated On: 28 March 2024 4:38 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  6. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  7. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  10. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி