/* */

முன்னாள் அமைச்சர் சரோஜா முன்ஜாமீன் மனு: கோர்ட்டில் இன்று விசாரணை

மோசடி வழக்கில் முன் ஜாமீன் கேட்டு, முன்னாள் அமைச்சர் சரோஜா தாக்கல் செய்த மனு, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வருகிறது.

HIGHLIGHTS

முன்னாள் அமைச்சர் சரோஜா முன்ஜாமீன் மனு:   கோர்ட்டில் இன்று விசாரணை
X

இராசிபுரம் புதுப்பாளையம் சாலையைச் சேர்ந்தவர் குணசீலன், ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க மேலாளர். இவர் முன்னாள் தமிழக சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜாவின், அண்ணன் மருமகன். இவர் கடந்த செப்.30ம் தேதி ராசிபுரம் போலீசில், முன்னாள் அமைச்சர் சரோஜா மீது பண மோசடி செய்ததாக புகார் மனு அளித்தார்.

புகாரில், சத்துணவு திட்டத்துறையில் வேலை வாங்கித் தருவதாக, 15 பேர் தன்னிடம் ரூ. 76.50 லட்சம் பணம் அளித்தனர். அந்த தொகையை அமைச்சர் சரோஜாவிடம் வழங்கினேன். எனினும், அவர் வேலை எதுவும் வாங்கித் தரவில்லை என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட குற்றப்பிரி போலீசார், முன்னாள் அமைச்சர் சரோஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில், முன்ஜாமீன் கேட்டு கடந்த 29ம் தேதி முன்னாள் அமைச்சர் சரோஜா, நாமக்கல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு, இன்று நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

Updated On: 1 Nov 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...