அண்ணாவை தொடர்ந்து பெரியார் பற்றியும் பா.ஜ.க.அண்ணாமலை சர்ச்சை பேச்சு
பாஜக தலைவர் அண்ணாமலை.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் என் தேசம், என் மக்கள் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த நடைபயணத்தின் போது அண்ணா பற்றி அவர் தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சையாகி அதிமுகவுடனான கூட்டணி முறிவுக்கு காரணமாக அமைந்தது.
இந்நிலையில் அண்ணாமலை தற்போது தந்தை பெரியார் பற்றி ஒரு கருத்தினை வெளியிட்டு மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளார்.இது தொடர்பாக மேட்டுப்பாளையத்தில் நடந்த நடைபயண பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழகத்தில் தாய்மார்களும், சகோதரிகளும் பிரதமர் மோடியின் பக்கம் நிற்கின்றனர். பலரும் பெண் சுதந்திரம் பற்றி பேசுவார்கள். ஆனால் நாம்அதனை செய்து காட்டியுள்ளோம். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 400 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்று, மீண்டும் மோடி ஆட்சியையும், அவரை பிரதமராகவும் பாராளுமன்றத்தில் அமர வைக்க வேண்டும்.
ஏழைகளின் நலன், இந்தியா உலக நாடுகளிடையே உண்மையான பொருளாதார இடத்தை பெற, மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமையவேண்டும். ஏழைகளின் நலன், இந்தியா உலக நாடுகளிடையே உண்மையான பொருளாதார இடத்தை பெற,மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைய வேண்டும். இங்கே கூடியுள்ள கூட்டம் சாதாரண கூட்டம்இல்லை. தொண்டர்கள் ரூ.1000 உழைத்தால் ரூ.500 கட்சிக்காக செலவு செய்கின்றனர். யாரிடமும் கமிஷனுக்காக கைக்கட்டி நிற்கவில்லை.ஊழல் இல்லாத ஆட்சியை பா.ஜனதாவால் மட்டும் தான் தர முடியும். நீலகிரி தொகுதியில் ஊழல்வாதி ராசா எம்.பி.யைஅப்புறப்படுத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் ரூ. 12 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. ஆ. ராசா ரூ. 1.70 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளார்.
கோவைக்கு பிரதமர் திட்டத்தில் 53 ஆயிரத்து 688 பேருக்கு இலவச வீடு வந்துள்ளது. குடிநீர் 66 சதவீதம் பேருக்கு குழாய் மூலம் வருகிறது. இப்படிபல திட்டங்களை நாங்கள் கொடுத்துள்ளோம். நாங்கள் அதனை சொல்லி வாக்கு கேட்போம், தி.மு.க. எதனை கூறி வாக்கு கேட்கும். அவர்கள்தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.
திராவிட கழகத்தில் இருந்து பிரிந்து சென்று சிலர் திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியைஆரம்பித்தனர். அப்படி அவர்கள் சென்றபோது, கண்ணீர் துளிகளோடு, திராவிட கழகத்தில் இருந்து பிரிந்து செல்வதாக தெரிவித்தனர்.இதனால் பெரியார், அவர்களை தி.மு.க. தலைவர்கள் என்று அழைக்கவில்லை. கடைசி வரை கண்ணீர் துளி தலைவர்கள் என்றேஅழைத்தார். பெரியார் சுத்தமாக மதிக்காத ஒரு கட்சி என்றால் அது திராவிட முன்னேற்ற கழகம் தான்.
1965-ல் இந்தி திணிப்பு போராட்டத்தின்போது,பெரியார் இந்தி திணிப்பு போராட்டம் என்பதே தி.மு.க.வின் ஒரு நாடகம். தி.மு.க. கட்சியே ஒரு நாடக கட்சி. கண்ணீர் துளி கட்சி, பொய்யைசொல்லி ஆட்சியில் இருக்கக்கூடிய கட்சி. இந்த கட்சியை நீங்கள் முழுவதுமாக அப்புறப்படுத்த வேண்டும். தி.மு.க.வுக்கு தலைவர்கள் கிடையாது.அவர்களுக்கு கொள்கை கிடையாது. மொத்தத்தில் தி.மு.க. என்பது தலைவர்கள், கொள்கை இல்லாத கட்சியாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, துணைத்தலைவர் விக்னேஷ், செயலாளர்ஜெயபால், மத்திய நலத்திட்ட மாவட்ட தலைவர் செயலாளர் ராகவன், சிறுபான்மை பிரிவு வடக்கு மாவட்ட தலைவர் லியாகத்அலி, காரமடை நகரதலைவர் ஆனந்தகுமார் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu