நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.வை முறியடிக்கவேண்டும்: நாஞ்சில் சம்பத் பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.வை முறியடிக்கவேண்டும்:  நாஞ்சில் சம்பத் பேச்சு
X

கோவையில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.வை முறியடிக்கவேண்டும் என கோவையில் நடந்த கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகர தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதற்கு கூடலூர் நகர மன்ற தலைவரும், செயலாளருமான அறிவரசு தலைமை தாங்கினார். கோவை வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அந்தோணி ராஜ் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகானந்தம், கூடலூர் நகராட்சி துணை தலைவர் ரதி ராஜேந்திரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக கோவை வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாநில விவசாய அணி இணைச் செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ. தர்மலிங்கம், மாநில விவசாய தொழிலாளர் அணி இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சி.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்களை ஒருங்கிணைத்து பணியாற்றிக் கொண்டி ருக்கிறார். அவரது பணிகளுக்கு அனைவரும் உதவியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டை முன்னேற விடாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை நாம் முறியடித்தாக வேண்டும். எல்லோரும் ஒன்றிணைந்து பணியாற்றி, வரும் தேர்தலில் பா.ஜ.க. அரசை வீழ்த்தி ஆக வேண்டும். அப்போதுதான் தமிழ்நாடு இன்னும் உன்னத நிலையை அடையும்.

மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்ப்போரை நசுக்கும் நட வடிக்கைகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபடுகிறது. இது மிகவும் கண்டி க்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் தலைமை கழக பேச்சாளர்கள் திருப்பூர் கூத்தரசன், உடுமலை தண்டபாணி, நரசிம்ம நாயக்கன்பா ளையம் நகர செயலாளர் ஸ்ரீதரன், கூடலூர் நகர துணைச் செயலாளர் கிரேசி, செல்வி, நகர பொருளாளர் சந்திர சேகரன், மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிர மணியம் , நகர இளைஞரணி அமை ப்பாளர் உதயகுமார், தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் உதயகுமார், பாலச்சந்திரன், வக்கீல் பிரபு மற்றும் கூடலூர் நகர கவுன்சிலர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூடலூர் நகர துணைச் செயலாளர் துரை.செந்தில்குமார் நன்றி கூறினார்.

Tags

Next Story