/* */

தடுப்பூசி வீணாவதை தடுக்க வேண்டும் : மத்திய அரசு வலியுறுத்தல்

தடுப்பூசிகள் வீணாகுவதை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்திக் கூறியுள்ளது.

HIGHLIGHTS

தடுப்பூசி வீணாவதை தடுக்க வேண்டும் : மத்திய அரசு வலியுறுத்தல்
X

உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகமாகி உலகம் முழுதுவதுமே தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ​ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தடுப்பூசிகள் வீணாகுவதை குறைத்தால் மட்டுமே மேலும் பலருக்கு தடுப்பூசி போட முடியும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தடுப்பூசி வீணாகுவது 1 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.இதை மத்திய அரசு வேண்டுகோளாக கேட்டுக்கொண்டுள்ளது. இது நியாயமான, மிக அவசியமான மற்றும் செய்யக்கூடிய வேண்டுகோள் தான்.

தடுப்பூசி தயாரிப்புகளுக்கான கால அவகாசம் அதிகமாக உள்ளது. ஆனால் நமக்கு இங்கு நிலவும் சூழலின் அடிப்படையில் வினியோகத்தை விட தேவை அதிகமாக உள்ளது. கொரோனா தொற்று நமக்கு முடிவுக்கு வரவேண்டும் என்றால் தடுப்பூசி என்ற ஆயுதம் நியாயமான முறையிலும், உகந்த முறையிலும் பயன்படுத்தப்பட வேண்டும். உலக அளவில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருப்பதால், அவை வீணாவதை குறைப்பதன் மூலமாக இன்னும் பலருக்கு தடுப்பூசி போட முடியும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Updated On: 12 Jun 2021 2:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  2. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  4. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  5. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  6. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  9. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  10. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!