/* */

சுகாதாரத்துறையில் பணியிடங்கள் காலி: விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

ஈரோடு மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சுகாதாரத்துறையில் பணியிடங்கள் காலி: விண்ணப்பிக்க நீங்க ரெடியா?
X

கோப்பு படம் 

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் துணை சுகாதார நிலையம் நல்வாழ்வு மையங்களில், 65 பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் அல்லது சுகாதார ஆய்வாளர்கள் நிலை-2 (ஆண்) மற்றும் 123 இடைநிலை சுகாதார பணியாளர்களின் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தற்காலிகமாக பணிபுரிவதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை https://erode.nic.in/notice-category என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மேலும், ஈரோடு திண்டலில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரிய சான்றிதழ் நகல்களுடன் ஈரோடு திண்டல் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில், வருகிற 15-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Updated On: 8 Dec 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!