/* */

கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள செல்போன் கடை ஷட்டரை உடைத்து செல்போன் பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை  உடைத்து  பணம்,செல்போன்கள் திருட்டு
X

கைது செய்யப்பட்ட பாண்டியராஜன்.

கோயம்பேடு மார்க்கெட்டில் செல்போன் கடையில் கதவை உடைத்து விலை உயர்ந்த செல்போன், பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் ராஜா என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் சரவணன் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பூட்டி இருந்த கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து விலை உயர்ந்த செல்போன் மற்றும் கல்லாப்பெட்டியில் இருந்த பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக சென்ற மூட்டை தூக்கும் கூலி தொழிலாளிகள் சிலர் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக கடையின் உரிமையாளர் சரவணனுக்கு தகவல் அளித்தனர்.தகவல் அறிந்து வந்த சரவணன் ஷட்டர் உடைக்கப்பட்டு செல்போன் பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் இதுக்குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் ( வயது 33) என தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட பாண்டியராஜன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு சம்பந்தமான குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 26 April 2024 8:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க