/* */

வீடுகளில் பூட்டை உடைத்து டிவி, சிலிண்டர் திருடிய தந்தை மகன் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தி் வீடுகளில் பூட்டை உடைத்து டிவி, சிலிண்டர் திருடிய தந்தை மகனை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

வீடுகளில் பூட்டை உடைத்து டிவி, சிலிண்டர்  திருடிய தந்தை மகன் கைது
X

கைது செய்யப்பட்ட தந்தை மகன்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் காவல்நிலையம் அருகே பள்ளி தலைமையாசிரியர் ஒருவரின் ஜந்து பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்த சிவசங்கர் மற்றும் சிவா ஆகிய தந்தை மகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவுபடி, நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் கோட்டார் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமார், தலைமை காவலர் விஜயகுமார்,சிபு ரீகன்,சிவக்குமார்,மற்றும் கிருஷ்ண பிரசாத் ஆகியோர்கள் இன்று குற்றவாளிகள் தந்தை மகன் இருவரையும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து தங்கசங்கிலியை போலீசார் முதலில் பறிமுதல் செய்தனர் மேலும் வடிவேலு பட பாணியில் வடசேரி மற்றும் ராஜாக்கமங்கலம் பகுதியில் வீடுகளில் இருந்த எல்.இ.டி டிவி,ஹோம் தியேட்டர்,வெண்கல குத்துவிளக்கு,பானை,கேஸ் சிலிண்டர் ஆகிய பொருட்களையும் அவர்கள் திருடியது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் தந்தை மகன் ஆகிய இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் வெகுவாக பாராட்டினார்.

Updated On: 24 April 2024 8:34 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...