/* */

சென்னை புழல் அருகே குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்தவர் கைது

சென்னை புழல் அருகே காரில் கடத்தி வந்து கடைகளுக்கு குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சென்னை புழல் அருகே குட்கா பொருட்களை காரில் கடத்தி வந்தவர் கைது
X

சென்னை புழலில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக குட்கா போதை பொருட்கள் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு அடிமையாகி பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வரும் மக்களையும்,பள்ளி, கல்லூரி மாணவர்களையும் போதைப் பொருட்களுக்கு அடிமை ஆகுவதை தடுக்கும் வகையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் ஒழிக்கும் வகையில் தமிழக அரசால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்.இதனை முற்றிலுமாக தடுக்கும் விதத்தில் காவல்துறையினர் அவ்வப்போது பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு கைது நடவடிக்கையும் எடுத்து வருகிறார்கள். ஆனாலும் போலீசார் கண்காணிப்பையும் மீறி பல இடங்களிலும் குட்கா பொட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி புழல் பகுதியில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள கடைக்கு கார் ஒன்று வந்து நின்றது. அந்த காரில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் இறக்கப்பட்டதை கண்டு பிடித்தனர்.

இதனை அறிந்த போலீசார் சோதனை மேற்கொண்ட போது அந்த கடையில் குட்கா போதப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. பின்னர் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். குட்கா போதை பொருட்களை கடத்தி வந்ததாக மாரிசெல்வம் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 11 Jan 2024 8:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  6. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  7. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  9. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  10. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!