/* */

இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!

இளையராஜா, ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
X

இளையராஜா மற்றும் ரஜினிகாந்த் இருவரின் வரலாற்று படத்தில் நடிப்பதற்கு நடிகர் தனுஷ் விருப்பம் தெரிவித்து இருந்தார். மேலும் அதில் எப்படி நடிக்கப்போகிறேன் என்பதை நானே நடித்துப்பார்த்து இருக்கிறேன் என்றும் வெளிப்படுத்தியிருந்தார். அதில் ஒன்று இப்போது நடந்து கொண்டிருப்பதாகவும் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டது. தனுஷ் தானே இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தை முடித்துள்ளார். அடுத்து அவர், சேகர் கமுலா படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘இளையராஜா’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்குகிறார். கனெக்ட் மீடியா, பிகே ப்ரைம் புரொடக்ஷன், மெர்குரி மூவீஸ் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரிக்கின்றன. நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. அதில் தனுஷ் பேசியதாவது: இளையராஜாவாக நடித்தால் எப்படி இருக்கும் என நினைத்து, மனதுக்குள்ளாகவே நடித்துப் பார்த்திருக்கிறேன். அதனால் பல இரவுகள் தூக்கம் தொலைத்திருக்கிறேன். இரண்டு பேரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்பட்டேன். ஒன்று இளையராஜா மற்றொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஒன்று இப்போது நடக்கிறது.

இளையராஜாவின் இசைதான் எனக்குத் துணை. ஒரு காட்சியில் நடிப்பதற்கு முன்னர் இளையராஜாவின் இசையைக் கேட்பேன். அவரின் இசை அந்த காட்சிக்கு ஏற்ற மாதிரி என்னை நடிக்க வைக்கும். வெற்றிமாறன் ஒரு சில முறை இதை பார்த்திருக்கிறார்.

இளையராஜா கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய சவால் என்கிறார்கள். எனக்கு அப்படித் தெரியவில்லை. ஏனெனில், இளையராஜாவின் இசையே சொல்லும் எப்படி நடிக்க வேண்டும் என்று நடிகர் தனுஷ் பேசினார்.

Updated On: 29 March 2024 5:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...