/* */

ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்

ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக அவரது சகோதரர் சத்யநாராயண ராவ் தெரிவித்தார்

HIGHLIGHTS

ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
X

நடிகர் ரஜினிகாந்த்

சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் சமூக அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. அதனை அவரது சகோதரர் சத்திய நாராயணராவ் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளார்களிடம் பேசிய அவர், இந்த அறக்கட்டளையின் நிறுவனர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் ரஜினிகாந்த் பெயரில் பல தர்மங்களை செய்து வருகிறார். இந்த புனிதமான அறக்கட்டளை நல்ல எண்ணத்தில் ஏழை மக்களுக்கு உதவி செய்ய திறக்கப்பட்டுள்ளது. ரஜினி ஆசிர்வாதத்தில் இவை நடைபெற்று உள்ளது. இந்த அமைப்பு நன்றாக வளர வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், , நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ரசிகர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த சத்தியநாராயணா, அது இறைவனிடம் தான் இருக்கிறது என்று கூறினார். ரஜினிகாந்த் ஆளுநரை அன்பு மற்றும் பாசத்தின் அடிப்படையிலேயே சந்தித்தார் என்றும் விமர்சனத்திற்கு முற்றுபுள்ளி வைத்தார்.

Updated On: 5 Sep 2022 3:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்