/* */

சென்னை விமானநிலையத்தில் கடத்த முயன்ற பல கோடி மதிப்பு சிவலிங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்காவுக்கு கடத்த இருந்த பழமை வாய்ந்த சிவலிங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

சென்னை விமானநிலையத்தில் கடத்த முயன்ற பல கோடி மதிப்பு சிவலிங்கம் பறிமுதல்
X

சிவலிங்கம் சிலை.

சென்னை விமான நிலைய சரக முனையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு, சரக்கு விமானங்களில் அனுப்ப வந்திருந்த பார்சல்களை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கு ஒரு பார்சல் வந்திருந்தது. அந்த பார்சலினுள் பார்சல் சிவலிங்கம் சிலை ஒன்று இருப்பதாகவும், அந்த சிலை கும்பகோணத்தில் உள்ள கலை மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை மையத்தில் வாங்கியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து பாா்சலை பிரித்து பாா்த்து சோதனையிட்டனா். பாா்சலுக்குள் நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்கம் சிலை இருந்ததை கண்டுப்பிடித்தனா். மேலும் இந்த சிலை புதிதாக கும்பகோணத்தில் வாங்கியதற்கான சான்றிதழ் சமா்பிக்கப்படவில்லை. மேலும் இதைப்போன்று சிலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறவா்கள், அந்த சிலை பழங்கால சிலை இல்லை என்று இந்திய தொல்லியல் துறையினா் அளித்த சான்றிதழையும் இணைக்க வேண்டும். ஆனால் அந்த சான்றிதழ் இணைக்கப்படவில்லை. அதோடு சிலை பாா்வைக்கு மிகவும் பழமையானதாக தெரிந்தது. இதையடுத்து இந்த சிலையை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கு சுங்கத்துறையினா் தடை விதித்தனா். மேலும் சிலையை சுங்கத்துறையினா் அவா்களுடைய கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டனா்.

இந்திய தொல்லியல் துறைக்கு தகவல் கொடுத்தனா். அவா்கள் வந்து சிலையை முழுமையாக ஆய்வு செய்தனா். அப்போது இந்த சிலை சுமாா் 1800 ஆண்டுகளிலிருந்து 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது என்பதை கண்டுப்பிடித்தனா். இந்த சிலை 36 செ.மீ. உயரமும், 4.56 கிலோ எடையிலான பித்தளை சிலை. விலை மதிப்பில்லாதது என்பதையும் கண்டுப்பிடித்தனா்.

இதையடுத்து சுங்கத்துறையினா் சுங்கத்துறை பழமையான சிலையை புதிய சிலை என்று கூறி, அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக கடத்த முயன்றதாக வழக்குப்பதிவு செய்தனா். அதோடு சுங்கத்துறை நுன்னறிவு பிரிவு அதிகாரிகள் இது சம்பந்தமாக தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனா். இது கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே கெடிலம் என்ற பகுதியில் இருந்து இந்த சிலை கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மேலும் இந்த நாகாபரணத்துடன் கூடிய சிவலிங்கம் சிலை மிகவும் பழமையான தொல்லியல்துறை யோடு சம்பந்தப்பட்டது என்பதால் இதை வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக அனுப்புவது தவறு என்று வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் இந்த பழமையான விலைமதிப்பில்லாத சிலையை அனுப்பிய நபர்கள் யார்? எதற்காக வெளிநாட்டிற்கு அனுப்புகின்றனர்? வெளிநாட்டில் இந்த சிலையை யார் வாங்குகின்றனா்? என்று தொடர்ந்து விசாரணை நடத்திக் கொண்டு இருக்கின்றனா்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழமையான சிலை அமெரிக்காவுக்கு கடத்த முயன்றதை சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிலைக்கு பின்னால் சா்வதேச சிலை கடத்தும் கும்பலின் சதித்திட்டம் அடங்கியுள்ளதா? என்றும் விசாரணை நடக்கிறது.

Updated On: 9 April 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு