/* */

தர்மபுரி அருகே ரூ. 7 லட்சம் மதிப்பிலான குட்கா லாரியுடன் பறிமுதல்

தர்மபுரி அருகே ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான குட்கா லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

தர்மபுரி அருகே ரூ. 7 லட்சம் மதிப்பிலான குட்கா லாரியுடன் பறிமுதல்
X

குட்காவுடன் பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின்பேரில் தர்மபுரி காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் மேற்பார்வையில் தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா பானு உதவி காவல் ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் மொபைல் போலீசார் நேற்று நள்ளிரவில் தர்மபுரி சேலம் நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அதிவேகமாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். போலீசார் நிறுத்தி சோதனை செய்த உடனே ஈச்சர் லாரி டிரைவர் உள்ளிட்டோர் அங்கிருந்து தப்பி ஓடி மறைந்தனர். இந்த லாரியில் பொருட்கள் எதுவுமே இல்லாததை கண்டு போலீசார் திகைத்தனர். பின்னர் அதனை முழுமையாக சோதனை செய்தபோது ரகசிய அறைகள் வைத்து பெங்களூரிலிருந்து குட்கா கடத்திவந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் லாரியையும்,குட்காவையும் பறிமுதல் செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரகசிய அறை அமைத்து குட்கா எடுத்து வந்தது போலீசாரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது தொடர்ந்து தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குட்காவின் மதிப்பு சுமார் ரூபாய் 7 இலட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 2 March 2022 12:18 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  5. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  8. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  9. செய்யாறு
    மிளகாய் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை: விவசாயிகளுக்கு பயிற்சி
  10. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி