'கை' கொடுக்கும் 'ஆப்பிள்'

ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ., டிம் குக் இந்தியாவின் கொரோனா பாதிப்புகளுக்கு உதவுவதாக அறிவித்துள்ளார்.

Update: 2021-04-29 10:19 GMT

ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ., டிம் குக் 

பெருந்தொற்று காலக்கட்டத்தில் இந்தியாவுக்கு கை கொடுத்து உதவ  ஆப்பிள் சிஇஓ டிம் குக் தயாராக உள்ளார்.

ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்புகளை சரி செய்வதற்கான பணிகளில் ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ பணியாளர்கள், முன்கள ஊழியர்கள் என பாதிக்கப்பட்டுள்ள அனைவரோடும்  ஆப்பிள் துணை நிற்கிறது. களத்தில் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள தேவையான உதவிகளுக்கு ஆப்பிள் நன்கொடை வழங்க தயாரா உள்ளது என டிம் குக் தெரிவித்து இருக்கிறார்.

கொரோனா  தொற்றின் 2வது அலை இந்தியா முழுவதும்  தீவிரம் அடைந்துள்ளது. தற்போதைய சூழலில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு  வருகின்றனர்.  முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் சத்யா  நாதெல்லா மற்றும் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் இந்தியாவுக்கு உதவுவதாக அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News