பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு வெண்ணந்தூர் பா.ஜ., ஒன்றிய தலைவர் திவ்யா தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.;
பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
வெண்ணந்தூர்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 26 சுற்றுலா பயணிகளுக்கு வெண்ணந்தூர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அண்ணாதுரை சிலை அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் மோட்ச தீபம் ஏற்றி மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றியத் தலைவர் திவ்யா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தமிழரசு முன்னிலை வகித்தார். ராசிபுரம் ஒன்றிய முன்னாள் தலைவர் வடிவேல், ஒன்றியப் பொதுச் செயலாளர் கந்தசாமி, துணைத்தலைவர் தனகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.