ஆழம் தெரியாமல் ஆபத்து - எச்சரிக்கை பலகை அவசியம்
ஆற்றிற்கு, கோடை விடுமுறையில் அதிக மக்கள் வருவதால் முன்எச்சரிக்கை பலகை வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது;
ஆழம் தெரியாமல் ஆபத்து - எச்சரிக்கை பலகை அவசியம்
பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் வரம்புக்குட்பட்ட ஆவத்திபாளையம், சந்தைப்பேட்டை, ஆவாரங்காடு, பெரியார் நகர், வசந்த நகர், காவிரி, ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ளூர் மக்கள் தினசரி துணி துவைக்கும் மற்றும் குளிக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், கோடை விடுமுறையில் வெளியூரிலிருந்து பலர் குடும்பத்துடன் ஆற்றில் குளிக்க வருவதால், ஆற்றின் ஆழமான பகுதிகளை அறியாதவர்கள், விபத்துக்குள்ளாவதற்கான அபாயம் அதிகரித்து வருகிறது. உள்ளூர் மக்கள் ஆபத்தான இடங்களைப் பற்றி அறிந்திருந்தாலும், வெளியூரிலிருந்து வந்தவர்களுக்கு இது தெரியாது. இதனால், ஆற்றின் ஆழமான பகுதிகளில் எதிர்பாராத விபரீதங்கள் ஏற்படக்கூடும். எனவே, அந்தந்த ஆபத்தான பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வலியுறுத்தலாகும்.