மின்சாரம் பாய்ந்ததில் மூவர் உயிரிழப்பு
மோகனூர் அருகே கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்ததால் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது;
மின்சாரம் பாய்ந்த கம்பி வேலியில் மூவர் உயிரிழப்பு – நாமக்கலில் விபத்து
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஆண்டாபுரத்தில் மின்சாரம் பாய்ந்த கம்பி வேலியில் சிக்கி, மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி செல்வம் (60), தனது மனைவி இளஞ்சியம் (50), மகன் அருள் (35), மற்றும் அருளின் குழந்தைகள் சுஜித் (5) மற்றும் ஐவிலி (3) ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். செல்வம், அருகிலுள்ள மணி என்பவரிடம் 2 ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்து பருத்தி மற்றும் சோளம் பயிரிடப்பட்டிருந்தது.
நேற்று காலை, விவசாய வேலைக்காக இளஞ்சியம் தனது பேரன் சுஜித் மற்றும் பேத்தி ஐவிலியுடன் வயலை நோக்கிச் சென்றிருந்தார். பிற்பகல் 3:30 மணியளவில் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்கள் நடந்து வந்த பாதையின் அருகே இருந்த கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்தது.
முன்னதாகப் பெய்த மழையால் மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவே இந்த துயர சம்பவத்துக்குக் காரணமாகத் தெரிகிறது. இளஞ்சியம் மற்றும் குழந்தைகள் மூவரும் கம்பியை தொட்ந்ததுடன், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தற்சமயம் வழியாக வந்த பொதுமக்கள், மூவரும் இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு, உடனடியாக உறவினர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மோகனூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது