சிவில் இன்ஜினியர்கள் சங்கத்தில் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா
நாமக்கல்லில், கட்டட பொறியாளர்கள் சங்கத்தின் 2025-26ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா விமர்சையாக நடைபெற்றது;
சிவில் இன்ஜினியர்கள் சங்கத்தில் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா
நாமக்கல் மாவட்ட கட்டட பொறியாளர்கள் சங்கத்தின் 2025-26ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, நாமக்கலில் விமர்சையாக நடைபெற்றது. விழாவில் சங்கத் தலைவர் மகேந்திரன் தலைமையிலாக செயலாளர் ஆனந்தகுமார் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக நெடுஞ்சாலைத்துறை சேலம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் மற்றும் நாமக்கல் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜோதி குப்புசாமி ஆகியோர் கலந்துகொண்டு விழாவிற்கு சிறப்பூட்டினர்.
இந்த விழாவின் முக்கிய அம்சமாக, சங்கத்தின் புதிய தலைவராக வெங்கடாஜலம், செயலாளராக நேதாஜி, பொருளாளராக சகாதேவன், மற்றும் பொது தொடர்பு அதிகாரியாக சக்கரவர்த்தி ஆகியோர் பதவியேற்றனர். அவர்களுக்கு சங்க மாநில தலைவர் விஜயபானு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, துணைத் தலைவர்கள், இணை செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரும் பதவியேற்று பொறுப்பேற்றனர். மேலும், புதிய உறுப்பினர்களும் சங்கத்தில் இணைந்தனர். விழாவில் நிர்வாகிகள், தொழில்துறை நண்பர்கள், குடும்பத்தினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.