குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு 25 மாற்றுத்திறனாளி குழந்தைகள் கல்வி சுற்றுலா

குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு மாற்றுத்திறன் குழந்தைகள் கல்வி சுற்றுலா அனுபவம் பெற வாய்ய்ப்பு;

Update: 2025-04-09 10:22 GMT

குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு மாற்றுத்திறன் குழந்தைகள் கல்வி சுற்றுலா

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனுடைய இளம் குழந்தைகளுக்கான ஒரு நாள் கல்வி சுற்றுலாவிற்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் செயல்பட்டு வரும் அறிவுசார் குறைபாடுடைய, புற உலகச் சிந்தனையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான ஆரம்பகால பயிற்சி மையத்தில் பயிலும் 6 வயது வரையான இளம் சிறார்கள், அவர்களது பெற்றோர், நர்சுகள், தசைப்பயிற்சி மற்றும் சிறப்பாசிரியர்களுடன் ஒரு நாள் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, சேலம் மாவட்டம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு 25 மாற்றுத்திறன் குழந்தைகள் வேன் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் உமா குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி வழியனுப்பி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட சுற்றுலா அலுவலர் அபராஜிதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News